

ஸ்ரீ:
ஸந்த:ஸ்ரீரங்கப்ருத்வீச சரணத்ராணசேகரா:
ஜயந்தி புவனத்ராண பதபங்கஜரேணவ: .1.
ஸ்ரீரங்கநாதன் பாதுகைகளை பரமஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக்கொள்ளுகிற பெரியோர்களுடைய திருவடிதூள்கள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகிறது. அப்பேர்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.(உட்கருத்து) நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறவர்கள் தாங்களும் நல்லகதியடைந்து எல்லாருக்கும் ஸகலபுருஷார்த்தங்களையும் கொடுப்பார்கள் என்பது.
No comments:
Post a Comment