Wednesday, June 24, 2009

ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்-ப்ரஸ்தாவ பத்ததி


ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீநிவாஸ ராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

ப்ரஸ்தாவ பத்ததி

திவ்யஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாதந்யாஸம் ப்ரதமமநகா பாரதீ யத்ர சக்ரே;
யோகக்ஷேமம் ஸகல ஜகதாம் த்வய்யதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸூதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே.4
ஓ பாதுகையே! ப்ரம்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கநாதனை நீ திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய். உன்னைப்போலவே ஸரஸ்வதி தேவியும் வரும்பொழுது முதலிலே வால்மீகிதான் உன்னைப்பற்றிக் கவனம் பண்ணினார். ஸ்ரீமத் ராமயணத்துக்கு ஆதிகாவ்யமென்று பெயர். எல்லா லோகங்களுடைய ஸகல க்ஷேமமும் உன் அதீநமென்று வால்மீகி மஹரிஷியானவர்,எனக்கு நல்வார்த்தையக் கொடுக்கவேண்டும்.


நீசேபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கேபி யந்நிவிசதே நிகமோத்தமாங்கே
ப்ராசேதஸப்ரப்ருதிபி:ப்ரதமோபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதிபாதுகயோர் யுகம் தத் 5
ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகைகள் மிகவும் உயர்ந்தன். நான் மிகவும் தாழ்ந்தவன். அவைகளை ஸ்ரீவால்மீகி முதலான அனேக பெரிய ருஷிகள் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கிறார்கள். அவைகளை நான் ஸ்தோத்திரம் பண்ணினாலும் அப்பாதுகைகளுக்கு மனதில் வருத்தமுண்டாகாது, ஸந்தோஷமாயிருக்கும். ஏனென்றால், இந்தப்பாதுகைகள் வேதத்தின் தலையிலே, அதாவது உபநிஷத்தில் இருக்கின்றன. அதாவது உபநிஷத்துகள் பாதுகைகளைப்பற்றி சொல்லுகின்றன். மிகவும் தாழ்ந்த என்தலையிலுமிருக்கின்றன.அதாவது
ஸ்ரீபாதுகையை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் சாதிக்கிறார்கள். அதில் பாதுகைகளுக்கு வருத்தமில்லை. எல்லோருக்கும் செளக்யமுண்டாகிறதென்று ஸந்தோஷமே. ஆதலால் நானும் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்.









No comments:

Post a Comment