
ப்ரஸ்தாவ பத்ததி
ஸ்லோகம் 2
பரதாய பரம் நமோஸ்து தஸ்மை
ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம்
யதுபஜ்ஞமசேஷத: ப்ருதிவ்யாம்
ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபவ:
ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகத்திற்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கிறேன்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில் அருளிச்செய்தபடி “பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால்தான் உலகத்திற்கு தெரிந்தது "பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்
No comments:
Post a Comment