Friday, June 26, 2009



1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 6
தத்தே முகுந்தமணிபாதுகயோர் நிவேசாத்
வல்மீகஸம்பவகிரா ஸமதாம் மமோக்தி:
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ
:
கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகிறது, யமுனா ஜலமும் விழுகிறது. இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்கா ஜலமெண்று கொண்டாடுகின்றார்கள். அதே மாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகாஸ்தோத்ரமாயிருப்பதால் வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணத்தைப்போல பெருமையடையும். அதாவது,எல்லாரும் த்ருஷ்டாதிருஷ்ட ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் பண்ணுகிறார்கள். அதுபோல இந்தக்ரந்தமும் பாராயணம் பண்ணினால் சகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

ஸ்லோகம் -7
விஜ்ஞாபயாமி கிமபி ப்ரதிபந்நபீதி
:
ப்ராகேவ ரங்கபதிவிப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகதாப்யஸூய:
ஸந்த:ஸ்ப்ருசந்து ஸதயை:ஹ்ருதயை:ஸ்துதிம் தே

ஏ பாதுகையே! முன்னதாகவே விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது. இது நல்லது இது பொல்லாதது என்று கண்டுபிடிக்கும்படியான ஸாமர்த்தியமுள்ளவர்களும் பொறாமையில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி நான் செய்கிற உன்னுடைய ஸ்தோத்ரத்தை கேட்கவேண்டும்.

No comments:

Post a Comment